இரண்டாம் பாகத்தின் (கொலை -2)தொடர்ச்சி ….
”மீண்டும்ஆள் யார் ”? என்றான் சாமி.
நானும் அப்படித்தானே நெனச்சுட்டு போனேன் ஆனா ஆள் இல்ல… கொல்ல போறது 10 மாச குழந்தைய …
இதைக்கேட்டதும் சாமிக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது ,அதிர்ச்சியில் எழுந்து நின்றான்
”என்ன சொல்ற … 10 மாச குழந்தையா…?கருப்பு… கருப்பு …
” ஆமா… ஒரு பெரிய கோடீஸ்வரன் சின்னவீடு வச்சிருக்கான், குடும்பத்துல அதக்கூட ஏத்துக்கிட்டாங்க, ஆனா அதுக்கு பொறந்த ஆண் குழந்தைய ஏத்துக்கமுடியல …சொத்துக்காக இந்த கொலை , அதப்பத்தி நமக்கென்ன, 10 லட்சம் எவன் குடுப்பான்… சொல்லு… ”
”கருப்பு..அதுக்காக பச்ச குழந்தைய ….”
”ஏய் ..இதோ பாரு எனக்கு தேவை பணம் அவ்ளோ தான்.. குழந்தையோ ,கிழவனோ …புடிச்சா இரு , இல்லாட்டி போயிட்டே இருன்னு சொல்லி இதுக்கு மேல உன்னைய கழட்டிவிடவும் முடியாது ,எல்லா விஷயமும் உனக்கும் தெரிஞ்சுருச்சு ..கண்ணமூடிட்டு வெட்டீரு , இல்ல உன்னையும் இதே இடத்துல தோண்டி பொதச்சிட்டு போயிருவேன்…சொல்லிட்டேன்”
இதைக்கேட்ட சாமியின் முகம் வெளிறிப்போனது..நீண்ட அமைதி நிலவியது ..,இருவரும் குடித்தார்கள், பேசிக்கொள்ளவில்லை . எதுவும் பேசாமல் சாமி எழுந்து நடந்தான் , மண்வெட்டியை எடுத்து வந்து குழி வெட்டினான் ,கருப்பு அவனை பார்த்து சிரித்தான் .குழி பெரிதாகிக்கொண்டே போனது …
”இப்ப மணி 12.30 ஆவுது நான் போயிட்டு 2 மணிக்குள்ள குழந்தையோட வர்றேன் , கொன்னு புதைச்சிட்டு விடியறதுக்குள்ள போகணும் ..நான் வர்றேன் ”
”சரி..யாராவது என்ன பாத்துட்டா …”
பயப்படாத… இங்க யாரும் வரமாட்டாங்க …
ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு நடந்தான் …கருப்பின் உருவம் இருட்டில் மறைந்தது . இப்படி வசமாய் மாட்டிக்கொண்டோமே என்று நினைத்தான் சாமி . மீண்டும் நிறைய குடித்தான்..அழுதபடியே , காமாட்சி அம்மனை திட்டிய படியேகுழியை வெட்டி முடித்தான்.தூரத்தில் கருப்பு வரும் சத்தம் கேட்டது.அவனை பார்த்ததும் சாமிக்கு மீண்டும் அதிர்ச்சி .காரணம் கையில் குழந்தை இருந்தது , தோளில் ஒரு பெண்ணின் உருவம் தொங்கியது.சாமிக்கு அதிர்ச்சியின் தொடர்ச்சியை தாங்கிகொள்ளமுடியவில்லை …அழுதுவிட்டான்
கருப்பு என்ன ஆச்சு..? யார் இந்த பொம்பள …?
அத ஏன் கேக்கற ..வீட்ட கண்டுபிடிச்சு யாருக்கும் தெரியாம உள்ள நுழைஞ்சுட்டேன் ..குழந்தைய தூக்கும் பொது தூங்கிகிட்டு இருந்த அம்மா முழிச்சிருச்சு …நல்ல வேலை சத்தம் போடறதுக்குள்ள தலகாணிய வச்சு அமுத்திட்டேன் ..அப்பயும் சாகல , கையாலேயே கழுத்த நெரிச்சு கொன்னுட்டேன் …இப்படிதான்
என்று அந்த பெண்ணின் கழுதை அமுக்கி காட்டினான் ,அவள் கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்தது , சாமி முகத்தை திருப்பிக்கொண்டான் .
இதுக்கே பயந்தா எப்படி சாமி ….பாக்க அழகா வேற இருந்தாளா…
வேணாம் …போதும் போதும்
என்று காதை பொத்தினான்.. சத்தமாக சிரித்தபடியே குழியை எட்டிப்பார்த்தான் கருப்பு, அந்த பெண்ணின் உடலை உள்ளே தூக்கிப்போட்டான்..குழந்தையை எடுத்து வெளியே வைத்தான் ..
கருப்பு.. கருப்பு.. ஒரு கொலைன்னு தானே சொன்ன …இப்போ
ஆமாடா ..என்ன பண்றது அந்த பொம்பள பாத்துட்டா..வேறவழி இல்ல அதான் …சரி ..நான் ஒன்னு நீ ஒன்னு..அம்மாவ நான் கொன்னுட்டேன் குழந்தைய நீ கொன்று
சுக்கு நூறாய் நொறுங்கியது சாமியின் இதயம் ,கண்கள் இரண்டு நிமிடம் இமைக்கவில்லை . செய்வதறியாது சிலையாய் நின்றான்.ராணியை நினைத்துப்பார்த்தான் , நீண்ட நேரம் கடவுளை வேண்டினான்..வேறு வழியில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டான்.அவனைப்பார்த்த கருப்பு சிரித்தபடியே..
சொல்றத கேளு …அரிவாள நல்லா இருக்கமா புடிச்சுக்கோ.. கண்ண மூடிட்டு ஓங்கி வெட்டீரு.. தலை தனியா போயிரனும்.. இந்த சரக்க போட்டுக்கோ நல்லா..ஒன்னும் தெரியாது …இந்தா …
வாங்கிக்குடித்தான்..குழந்தையை பார்த்தான் , மிகவும் அழகாக இருந்த அந்த குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது .அரிவாளை கையில் எடுத்தான், இறுக்கமாக பிடித்தான், மூச்சு வாங்கியது. ராணியை நினைத்தான் காமாட்சி அம்மனை வேண்டினான் ..முதன்முதலாக கொலை செய்கிறேன் என்னை காப்பாத்து என்னை காப்பாத்து என்னை காப்பாத்து என்றபடியே அரிவாளை ஓங்கினான் . கண்களை மூடிக்கொண்டான் , முழு பலம் கொண்டு ஓங்கி வெட்டினான் ..இவன் முகத்தில் ரத்தம் தெளித்தது ,கண்ணை திறந்து பார்த்தான் தலை துண்டாக போய் விழுந்தது . குழந்தையின் உடலில் ரத்தம் பரவியது .உடலை எட்டி உதைத்தான்,உருண்டு குழியில் விழுந்தது .தலையை எடுத்து வந்து குழியில் போட்டுவிட்டு குழியை மூடினான் ..பணத்தையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு ஓடினான்.கருப்பு கூறியது நினைவுக்குவந்தது..
”இது தான் எனக்கும் கடைசி இதுக்கப்புறம் நானும் இங்க இருக்கவே மாட்டேன், யாரும் பாக்காத இடத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்”